×

களக்காடு கட்டளை கிராமத்தில் புதிய மின்மாற்றி ரூபி மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார்

நெல்லை, மே 4: நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு கட்டளை கிராமத்தில் புதிய மின்மாற்றியை ரூபி மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் களக்காடு ஒன்றியம் களக்காடு வட்டாரத்திற்கு உட்பட்டபகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் களக்காடு தெற்கு வட்டாரம், செங்களாக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கட்டளை கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அங்கு புதிதாக மின்மாற்றி அமைக்க ரூபி மனோகரன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டதின் பேரில் மின்துறையால் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் காமராஜர், அம்பேத்கர் புகைப்படங்களை திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டாரத் தலைவர் அலெக்ஸ், களக்காடு தெற்கு வட்டார நிர்வாகிகள் சுப்பிரமணியன், காங்கிரஸ் ஊடக பிரிவு ஸ்ரீதேவி மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post களக்காடு கட்டளை கிராமத்தில் புதிய மின்மாற்றி ரூபி மனோகரன் எம்எல்ஏ திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ruby Manokaran ,MLA ,Kalakadu ,Nellai ,Kalakkadu ,Nanguneri ,Dinakaran ,
× RELATED கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும்...